Category Archives: Religions

மதங்கள் உருவான கதை

ஆதி காலத்தில் ஒரே ஒரு வழிபாடு முறைதான் இருந்தது

உலகமெங்கும் அது இயற்கையை வழிப்படுவதே, பால் கொடுப்பதால் மாட்டை தெய்வமாக்கினார்கள். உலகம் இயங்க ஏதுவாக இருப்பதால் சூரியனை வழிப்பட்டார்கள். தண்ணீர் முக்கியம் என்பதால் மழையை வழிப்பட்டார்கள் சுவாசிக்க காற்று முக்கியம் என்பதால் அதுக்கு வாயு என பெயர் வைத்து வழிப்பட்டார்கள். மரங்கள் பல வித நன்மைகளை கொடுப்பதால் ஒரு தாய் போல வழிப்பட்டார்கள். பத்தி என்பது நன்றி தெரிவித்தலே என்பதாக இருந்தது.

இதுதான் உலகமெங்கும் ஒரே மதம் அது இயற்கை வழிபாடு. இதுவே சனாதன தா்மம் எல்லாரும் பின்பற்ற கூடிய தா்மம் என அறியப்பட்டது. “எப்படி ஓடும் தண்ணீர் ஒரு கல்லின் உருவத்தையே மாற்றுகிறதோ காலத்தால் அதே போல காலமும் மனிதா்களை மாற்றியது.” மனிதா்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கினார்கள், வழி தவறினார்கள். கடவுள் பார்த்தார், இது சரி வராது என்று தன் பிம்பங்களை ஞானிக்களாக இப்பூமிக்கு அனுப்பினார்.

அதுவும் எப்படி?

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அங்கு இருக்கும் மக்களின் தேவைகேற்ப மனநிலைகேற்ப, ஒரு அம்மா. தன் 5 பிள்ளைகளுக்கு ஒரே சமையலையா செய்வாள். ஒவ்வொரு பிள்ளையின் ஜீரண சக்திக்கு ஏற்ற உணவைத்தானே தாய் தருவாள். கடவுள் இந்த உலகத்தின் சிருஷ்டிகா்த்தா. நம் எல்லோருக்கும் சூழ்நிலைகேற்ப வேதங்கள் கொடுத்தார். மொத்தத்தில் கடவுள் ஒன்று வேதம் ஒன்று வேதத்தின் மொழிபெயர்ப்பு மூன்று. (எ.கா) இப்படித்தான் நாம் எடுத்துகொள்ள வேண்டும்.

எனக்கு உருளைகிழங்கு வறுவல் பிடிக்கும்.

என் தம்பிக்கோ உருளைகிழங்கு பொறியல் பிடிக்கும்.

என் சின்ன தம்பிக்கோ உருளைகிழங்கு கூட்டுதான் பிடிக்கும் மற்றொரு தம்பிக்கோ உருளைகிழங்கு வேகவைத்து அப்படியே சாப்பிடுவது பிடிக்கும். உருளைகிழங்கு என்னவோ ஒரு காய்தான் ஆனால் ஒவ்வொருத்தருடைய ருசிக்கு ஏற்ப இது உருமாற்றம் சுவை மாற்றம் ஆகிறது. இப்படி இருக்கும்போது என் கூட்டு தான் சிறந்தது. இல்லை இல்லை என் வறுவல் தான் சிறந்தது. இல்லவே இல்லை என் பொறியல் தான் சிறந்தது என வாதிடுவது எவ்வளவு மடமை???

இந்த உருமாற்றம், சுவை மாற்றத்திற்கு அப்பால் இருக்கும். உருளைகிழங்கே உண்மை என அறிதல் அல்லவோ அறிவார்ந்த செயல்.

உருளைகிழங்கு இடத்தில் மதம்.

இப்போது புரிகிறதா எப்படி மதங்கள் தோன்றின என்று………..